மதுரை பாலமேடு அருகே பிளஸ் டூ முடித்த மாணவனும், மாணவியும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை. தங்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு எடுத்த பரிதாபம்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வீரபத்திரன். இவர் அருகிலுள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகள் பவானி இவர்கள் இருவரும் பாலமேடு அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்த போது காதலித்து வந்துள்ளனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் வீரபத்திரன் தன் காதலி பவானியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனது அம்மாவிடம் பவானியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வீரபத்திரன் தாயார் வீரபத்திரனிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் தனது காதலி பவானியை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வீரபத்திரன் தனது தோட்டத்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது காதலன் இறந்த தகவலறிந்து அதிரச்சியடைந்த பவானியும்
இன்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பாலமேடு போலீசார் வீரபத்திரன் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், பவானி உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து இரு வீட்டாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் டூ படித்துள்ள 17 வயது மற்றும் 16 வயது மாணவ, மாணவிகள் காதலித்து, அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பாலமேடு பகுதியில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்ததுதரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்த […]
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]
- காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் […]
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]