• Thu. Mar 28th, 2024

பல்லடம் அருகே பள்ளிவாசலில் மதநல்லிணக்க விழா

ByS.Navinsanjai

Mar 13, 2023

பல்லடம் அருகே அறிவொளி நகரிலுள்ள பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விழா நடைபெற்றது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் உள்ள சின்ன பள்ளிவாசலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விழா நடைபெற்றது.


தமிழக அரசு மதநல்லிணக்க விருது பெற்ற முகமது ரபீக் தலைமை வைத்தார். மேலும் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,கொங்கு நாடு தேசிய கட்சி மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன்,பல்லடம் காங்கிரஸ் வட்டார தலைவர் கணேஷ் ஆகிய கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழக அரசின் மத நல்லிணக்க விருது பெற்ற முஹம்மது ரபிக் செய்தியாளர்களை சந்தித்த போது நாங்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.ஒரு சில குழுக்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் சொல்லக்கூடாது . முதல்வர் சகோதரத்துவம் சமத்துவம் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். அதே போல தான் பல்சமய நல்லுறவு இயக்கம் செயல்பட்டு வருகிறது. எப்போதும் சகோதரத்துவத்துடன் இருந்தால்தான் அனைத்து தொழிலும் முன்னேறும் என்பதால் இது போன்ற கூட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *