• Fri. Apr 26th, 2024

மேட்டூர் அணையில் இருந்து 1.85 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

ByA.Tamilselvan

Oct 16, 2022

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறப்பு.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆறு ஓடும் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *