ராமஜெயம் கொலை வழக்கு குறித்து 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது . முதல்கட்டமாக இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறுகிறது
அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனால் ராமஜெயம் கொலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடிக்கிறது.
புதிய விசாரணை குழு ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்ட காவலர்கள் இடம் பெற்றனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளின் மீது போலீசாரின் சந்தேக பார்வை விழுந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற போதுதான் ராமஜெயம் திட்டம் போட்டு கடத்தி கொல்லப்பட்டார். இதையடுத்து அதே பாணியில் இதற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள், அதில் ஈடுபட்ட ரவுடிகள் பற்றிய பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் உள்பட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. . இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது .
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]