செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக பலத்த மழை பெய்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் நடவு செய்யப்பட்ட நெல்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.