• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இசை அஞ்சலி செலுத்திய மதுரை முத்து..,

ByKalamegam Viswanathan

Jul 12, 2026

தன்னுடைய இனிமையான குரலால் மூன்று தலைமுறைகளை தாண்டியில் ரசிகர்களை கொண்ட பின்னணி பாடகி ஜானகியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் , மதுரை தனக்கன்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தனது இல்லத்தில் மறைந்த ஜானகி அவர்களுடைய உருவப்படத்திற்கு பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்து மலர்கள் தூவி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி கடைபிடித்த நிலையில்

‘ இசையரசி ஜானகி அவர்களுக்கு அவர் பாடிய பாடல்களை பாடி மேலும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது

மதுரை முத்துவின் மகள் கண்ணன் வந்து பாடுகிறான் என்ற ஒரு பாடலைப் பாட லை தொடர்ந்து மதுரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆண் மற்றும் பெண் குரலில் பாடி குறிப்பாக நான் போன பின்பும் நீ வாழ வேண்டும் என்கின்ற பாடலை பாடி இசை அரசி ஜானகி அவர்களுக்கு மதுரை முத்து ஓடு இணைந்து இசை அஞ்சலி செலுத்தினார்

ஜானகி அவர்களுடைய மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் அனைவரையும் தன்னுடைய நகைச்சுவையால் மகிழ்ச்சி அடைய செய்த மதுரை முத்து பின்னணி பாடகி இசை மூலம் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது