தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசை எதிர்த்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் R.K. ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாளை (17.12.2021) காலை 10 மணிக்கு சாத்தூர் காவல் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.