வரும் ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க வருகை தர இருக்கிறார். பிரதமரின் நிகழ்ச்சிக்காக தமிழக அரசு சில இடங்களை தேர்ந்தெடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பிய நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியை விருதுநகரில் வைத்துக்கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளிவந்தனஅதற்கு காரணம்
விருதுநகர் நேரு குடும்பத்துக்கு மாற்றாக காங்கிரஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த மண்.
மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் அடர்த்தியாக இருக்கும் மாவட்டம்.இந்தப் பின்னணியோடு விருதுநகரை செலக்ட் செய்த நரேந்திர மோடி அந்த விழாவுக்காக விருதுநகர் வரும்போது அங்கே காமராஜரின் நினைவு இல்லத்துக்கும் சென்றுவருவாரா என்ற கேள்வி தமிழக பாஜகவினர் மத்தியிலும், விருதுநகர் அரசியல் வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
பிரதமர் விருதுநகர் வரும்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க காமராஜரின் இல்லத்துக்கு சென்று வர வேண்டும் என்று தமிழக பாஜகவில் இருந்து சிலர் தலைமைக்கு வற்புறுத்தியிருக்கின்றனர். அதேநேரம், ‘பிரதமர் விருதுநகர் வரட்டும். அங்கே விழாவில் காமராஜரை பற்றி வாய் நிறைய புகழாரம் சூட்டட்டும். ஆனால் விருதுநகரில் இருக்கும் காமராஜரின் இல்லத்துக்கு மட்டும் சென்றுவிட வேண்டாம்” என்று தமிழக பாஜகவிலேயே சிலர் மேலிடப் பொறுப்பாளர்கள் மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர். இதற்குக் காரணமாக அவர்கள், “தஞ்சை பெரிய கோயிலுக்கு எப்படி அரசியல்வாதிகள் செல்வதை சென்டிமென்ட்டாக ஏற்பதில்லையோ அதேபோலத்தான் விருதுநகர் காமராஜர் இல்லத்துக்கும் ஒரு நெகட்டிவ் சென்டிமென்ட் இருக்கிறது” என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.வற்றாத புகழைக் கொண்ட வலிமையான பெருந்தலைவர் காமராஜருடைய பிறந்த இல்லத்துக்கு போவதில்
சென்டிமென்ட் இருக்கிறதா என்று விசாரித்த போதுநாங்களே சொல்லக் கூடாது. இருந்தாலும் அப்படித்தான் அரசியல் வட்டாரத்தில் ஒரு எண்ணம் இருக்கிறது. அதாவது காமராஜர் முதல்வராக இருந்தபோதிலும் தனது அதிகாரத்தின் ஒரு துளியைக் கூட தன் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தன் தாயாரை அவர் கடைசி வரை செல்வச் செழிப்பில் வைத்திருக்கவில்லை. எளிய வாழ்க்கை நடத்தவே அனுமதித்தார். அந்த வகையில் விருதுநகரில் இருக்கும் காமராஜரின் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு எளிய வாழ்க்கை நிரந்தரமாகிவிடும் என்ற ஒரு சென்டிமென்ட் காங்கிரஸ் காரர்களிடமே உண்டு.
ராஜீவ் காந்தி சுற்றுப் பயணம் வந்தபோது மூப்பனாரும், அருணாசலமும் அவரை காமராஜர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின் ராஜீவ் காந்தி அதிகாரத்துக்கே வரவில்லை. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டதும் காமராஜர் இல்லத்துக்கு செல்வதற்காக விருதுநகர் வந்தார் .அப்போது இந்த சென்டிமென் ட்டை எடுத்துச் சொன்னால் கோபித்துக் கொள்வார் என்பதால்… காமராஜரின் இல்லத்துக்கு சென்றுவிட்டு அப்படியே அருகே இருக்கும் காமராஜர் மண்டபத்துக்கு சென்று மாலையிட்டு வாருங்கள் என்று லோக்கல் காங்கிரஸார் வற்புறுத்தி அப்படியே அவரை செய்ய வைத்தனர்.
தமாகாவை தொடங்கும்போது மூப்பனார் விருதுநகர் காமராஜர் இல்லத்துக்குதான் வந்தார். தமாகாவின் முதல் தேர்தலில் மூப்பனார் ஜெயித்தாலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் கூட தமாகா கட்சியைநடத்த முடியவில்லை. அதன் பிறகு இன்றுவரை தமாகா என்பது பெரிய அதிகாரத்துக்கு வரக் கூடிய இயக்கமாக இல்லை. இப்படிப்பட்ட சென்டிமென்ட் காங்கிரஸுக்குள்ளும் காங்கிரஸ் அல்லாத விருதுநகர் அரசியலிலும் இருக்கிறது. அதனால் பாஜகவினர் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது” என்கிறார்கள்.
மெயின் பஜாருக்கும் நகராட்சிக்கும் நடுவே தெப்பம் அருகே இருக்கும் காமராஜரின் நினைவு இல்லம் என்பது மிகக் குறுகலான சாலையில் இருக்கிறது. அதனால் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் பிரதமர் அங்கே செல்ல அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது என்கிறார்கள் விருதுநகர் பாஜகவினர்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]