கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், நாகர்கோவிலில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ரெ.மகேஷ் முன்னிலையில் துவக்கி வைத்தார். துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.