தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராகவும்,இல .கணேசன் மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பதவ வழங்கப்பட உள்ளது. ஆளுநர் பதவிக்கு மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயர் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் பதவிக்கு முயற்சிப்பதாக சில மாதங்களுக்குமுன்பே பேசப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆளுநர் பதவி யாருக்கு கிடைக்கும் என பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.