• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்

ByKalamegam Viswanathan

Dec 19, 2024

சமயநல்லூரில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.
தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சமயநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் எம்.வி.கருப்பையா மாணிக்கம், மகேந்திரன், தமிழரசன், எஸ். எஸ். சரவணன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வாடிப்பட்டி வடக்கு மு. காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி எம்.வி.பி.ராஜா, யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா பேரூர் செயலாளர்கள் முருகேசன், அழகுராஜா நிர்வாகிகள் தேனி நாராயணசாமி வெற்றிவேல், திருப்பதி, துரை,தன்ராஜ், அன்பழகன், தமிழழகன், ரகு, புளியங்குளம் ராமகிருஷ்ணன், மகேந்திர பாண்டி, இளங்கோவன், முருகன், மகளிர் அணி லட்சுமி, பஞ்சவர்ணம், சரிதா பானு, பொதும்பு ராகுல், தேனூர் பாஸ்கரன், வாவிட மருதூர், ஆர்.பி. குமார், முடுவார்பட்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் மதுரை மேற்கு, தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் நன்றி கூறினார்.