நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அன்றைய தினம் சென்னை ராயபுரம் 49 வார்டில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை அதிமுகவினர் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடரப்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின. இதில், திமுக பிரமுகரை சட்டையை கழட்டுமாறு ஜெயக்குமார் வற்புறுத்துவது தெளிவாக தெரிகிறது. ஆனோல் தாக்குதலுக்கு உள்ளான நபர், திமுக சார்பாக கள்ள ஓட்டு போட வந்தவர் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயக்குமார் முன்னிலையில் சிலர் திமுக பிரமுகரை தாக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிவிட்டரில் கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடிச்சு கொடுத்ததற்கு என்மீதே வழக்கா..? திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு… இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே… என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 25 போலீசார் வீடு புகுந்து இழுத்துச் சென்றதாக அவரது மகன் ஜெயவர்தன் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]