திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்காலத்தில் பிரதமராக வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் திமுகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவாலயத்தில் இருந்து தற்போது முதல்வருக்கு தூபம் போட துவங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து யாரும் இதற்கு முன் பிரதமர் ஆக கூடிய தகுதி இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் திரிசக்தி சுந்தர்ராமன் நமது அரசியல் டுடேக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியவை
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு மக்களிடையே நிறை குறை உள்ள நிலையில் அது குறித்து நாம் பேச வரவில்லை. திமுகவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இதில் என்ன பெரிய தவறு உள்ளது. தமிழகம் செல்வ செழிப்பான மாநிலம், சமூக நீதி , மருத்துவம் கல்வி என பல கட்டமைப்புகளை திறம்பட செயல்பட கூடிய பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர்.
காமராஜர் , அண்ணா , கலைஞர் , மூப்பனார் , ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாக திகழ்ந்துள்ளனர். மேலும் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திறம்பட செயல்பட்டு வருகிறார். ஆனால் கலைஞரின் இடத்தை பிடித்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவரவருக்கு தனி திறமை உண்டு. அதனை முன் வைத்து தான் அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஸ்டாலின் இந்த நிலையை முன்னெடுக்க காரணம் என்ன சமூக நீதி நாள் அனுசரித்த பிறகு சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.
இதன் மூலம் தான் தேசிய அளவில் பிரச்சனைகளை பேசக்கூடிய ஒரு நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். ஆனால் ஸ்டாலினை தேசிய தலைவர்கள் அவர்களில் ஒருவராக ஏற்றுகொண்டார்களா என்று தெரியவில்லை. தற்போது ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக தடுக்க நினைப்பது எது என்ற கேள்வி எதார்த்தமாக எழும், ஆங்கில புலமை வாய்ந்த அண்ணா , ஜெயலலிதா கூட பிரதமராக முடியவில்லை. காரணம் இந்தி தெரியாதது தான், இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு சேவையாற்றக்கூடிய திக கருப்பு சட்டை இயக்கங்கள் , இந்தி திணிப்பு என்ற பெயரில் இந்தி படிக்க கூடாது என்ற பிரச்சாரத்தை முன் வைத்து மக்களை குழப்பி வருகின்றனர்.
தமிழகத்தை தாண்டினால் நமக்கு இந்தி தெரியவில்லை என்றால் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு காரணம் திராவிட கட்சிகள் உருவாக்கிய இந்தி கற்றுக்கொள்ள கூடாது என்ற மாய பிம்பம் தான். பிரதமர் மோடி தமிழ் குறித்து அதிக இடத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குறள், நாலடியார், அவ்வை குறித்து எல்லாம் மொழிபெயர்த்துகூறி வருகிறார். அதற்கு காரணம் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் தமிழர்களை கவர வேண்டும். அதற்காக தான் இந்த யுத்தியை மோடி எடுத்துள்ளார்.
இதனை தான் தற்போது ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டும். இந்தி கற்றுக்கொண்டால் மட்டும் தான் தேசிய தலைவர் என்ற பொறுப்பை குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் மற்றப்படி நீங்கள் இந்தியை கற்ற்க்கொள்ள மறுத்தால் தமிழகத்தில் மட்டும் ஆட்சியில் இருந்து கொள்ளுங்கள்.தேசிய அரசியலை குறித்து யோசிக்காதீர்கள்.


- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]