மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நவீனப்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததையொட்டி, பெரியகுளம் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.