சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5. 30 மணியளவில் மதுரை வந்தடையும் இண்டிகோ விமானத்தில் ஏசி சரியாக ஓடவில்லை என பயணிகள் புகார் செய்தனர். மேலும் சென்னையில் இருந்து மதுரை வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்து இருப்பதை எடுத்து இன்டிகோ விமான சேவை மதுரை விமான நிலைய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்டிகோவிமான நிறுவன ஊழியர்கள் மாற்று சூட்கேஸ் வழங்கி பயணியை அனுப்பி வைத்தனர்.
குளிர்சாதன வசதி சூட்கேஸ் சேதம் என பயணிகள் புகாரால் விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது…