• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மர்ம நோய்!

சென்னையின் பிரதான நகரங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் மழையால் வெள்ளக்காடாய் மாறியது. சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றி வந்தாலும், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி சாக்கடை நீராக மாறிவருகிறது. இந்தநிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான கீழ்பாக்கம், தண்டையார் பேட்டை, ஓமந்தூர்,…

கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்..

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ஜெயந்திரேன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணு பிரியா, சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியா, தனது சொந்த…

புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டும் உபரி நீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்,, சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியும் முழு கொள்ளளவை…

மதுரையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த சரண்யா, இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக மதுரை இராஜாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மையத்திற்கு செல்லுமாறு சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள்…

தமிழக அரசின் நடவடிக்கை வேதனை தருகிறது – ஓபிஸ்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது வேதனை தருகிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்…

கொட்டித் தீர்த்த கனமழையும்.. திருப்பதி நிலைமையும்..

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதியால், ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கல்யாணி அணை நிரம்பியதால், மதகுகள் திறக்கப்பட்டு, திருப்பதியிலிருந்து…

காவல் துறையின் அலட்சியம் – 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மனு கொடுக்கும் நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பொழுதும்போல் நுழைவாயிலில் போலீசார் வரும் மனுதாரரிடம் அவர்களது பைகளை சோதனை செய்து அனுப்புவது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் கார்…

கர்நாடகாவில் தொடரும் மழை..!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி,…

மழை, வெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி மாவட்ட மழை, வெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவினர் கன்னியாகுமரிக்கு இன்று பிற்பகல் வருகைதந்தனர். முதலில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள வெள்ள சேத புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த…

தலைசிறந்த மாவட்டமாக கோவை மாற்றப்படும் –முதல்வர் ஸ்டாலின்

கோவையில் இன்று நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கோவையில் 23,534 பேருக்கு ரூ.441.76 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.89.73 கோடியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை…