• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 6, 2022

சிந்தனைத் துளிகள்

 நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல.
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது.
ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.

 அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.

 நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்; செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.

 தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.

 இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அதுதான் விலைமதிக்க முடியாத திறமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *