• Sat. Apr 20th, 2024

ஆரஞ்சு அலர்ட் -மழையால் முடங்கியது மும்பை நகரம்

ByA.Tamilselvan

Jul 6, 2022

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே முடங்கி கிடக்கிறது.
தற்போது நாடு முழவதும் தென்மேற்கு பருவமழை காலம் . கேரளா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்யதுவங்கியுள்ளது. அதே போல கனமழை காரணமாக மும்பை நகரமே நிலைகுலைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 3 பேர் காயமடைந்துள்ளனர்.

போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருப்பதுடன்,பேருந்து மற்றும் ரயில்களை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல டாக்ஸி,ஆட்டோ போன்ற வாகனங்களையும் இயக்க முடியவில்லை.இதனால் பணிக்கு செல்லும் ஊழியர்கள் உட்பட ஏராளமான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே அடுத்த 3 நாட்களுக்கு மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுளளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *