தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், சசிகலாவும் சந்தித்துப் பேசலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் இருந்து வருகிறார்.ஆனால் அதிமுக தற்போது 4 அணிகளாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே தினகரனை ஓபிஎஸ் சந்தித்த நிலையில் தற்போது திருமணவிழா ஒன்றில் ஓபிஎஸ்-சசகலா சந்தித்துப்பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் சண்முகபிரபு – யாழினி திருமண விழா ஜூன், 7ல் தஞ்சாவூரில் நடைபெறுகிறது; பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.இந்நிகழ்வில் தான் ஓபிஎஸ்-சசிகலா சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.