நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரூர் பேரூராட்சி 13ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி அடைந்ததாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால் அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் இன்று முதல் திமுகவின் கோட்டையாக மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுத்த ஆபரேஷன் கோவையை திறம்பட செய்து முடித்துள்ளதாக, ஆகா ஓஹோ என்று அறிவாலயத்திலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக தகவல். செந்தில் பாலாஜி எந்த கட்சியில் இருந்தாலும் தனகென்று ஒரு திட்டத்தை வகுத்து வெற்றியை உருவாக்குவதில் வல்லவர் என்று மீண்டும் நிரூபித்து உள்ளார்.
- மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் […]
- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]