• Fri. Apr 26th, 2024

மே தினம், மதுபானக் கடைகள் அடைப்பு

ByKalamegam Viswanathan

Apr 28, 2023

மே தினத்தை முன்னிட்டு,வருகின்ற திங்கட்கிழமை 01.05.2023 அன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானம் அருந்தும் கூடங்கள் மூடப்படும் –
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில், மே தினத்தை முன்னிட்டு, வருகின்ற திங்கட்கிழமை (01.05.2023) அன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் , உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை 01.05.2023 அன்று ஒருநாள் மட்டும் முழுவதுமாக மூடப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *