சிவகாசியில் தேசிய லீக் சார்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தொரிவிக்கின்றன. இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.


உலக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் இப்பண்டிகை தமிழ்நாட்டிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் அரசு விழாவாகவும் , சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிவகாசி ராயல் மினி மகாலில் தேசிய லீக் சார்பாக இலவச வேஷ்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தேசியலீக் சட்ட அலோசகர் வி.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.இந்திய தேசிய லீக் மாநகர் தலைவர் முகமது கான் ,செயலாளர் முத்து விலாசா,பொருளாளர் முகமது காசீம் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய தேசிய லீக் மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் கராத்தே அக்பர் வரவேற்புரையாற்றினார்.விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி 28 வது வார்ட் மாமன்ற உறுப்பினர் ஜி.வெயில்ராஜ்,திமுக மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி,மாநகராட்சி 38 வார்ட் மாமன்ற உறுப்பினர் ஆர்.ரேணு நித்திலா ,ஜமால் முகமது அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் முகமது சிந்தாஷா,தொழில் அதிபர் செய்யது இப்ராஹிம் மற்றும் ராயல் ரபீக் ,அகில இந்திய காங்கிரல் மூத்த நிர்வாகி ஜப்பார்.சிறுபான்மை மாவட்ட தலைவர் முஹமது இஸ்மாயில்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி அப்துல் சர்தார்,முஸ்லீம் தொழில்வர்த்த சங்கம் திருமண மஹால் முன்னாள் தலைவர் செம்மல் எம்.எஸ்.எல்.சேட்,மற்றும் நகர பிரமுகர்களும் , மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஏழை,எளிய மக்கள் 400 பேருக்கு இலவச வேஷ்டி, சேலைகளை இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ.செய்யது ஜஹாங்கீர் வழங்கினார். மேலும் கண்ணகி காலனி ஜயப்பன் காலனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]