• Fri. Mar 29th, 2024

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் – சமத்துவ பொங்கள் விழா

தமிழர் திருநாளான பொங்கள் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சதக்கத்துல்லா, பில்லன், உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாவட்ட செயலாளர் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் அனைவருக்கும் தெரிவத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, தேவராஜ், நாகராஜ், ஆட்டோ ராஜன், தியாகு, தருமன், மத்தீன், ஜெகதீஸ், பாபுலால், உதகை நகர துணை செயலாளர் ரீட்டா, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், கீதா, நாகமணி, திவ்யா, மீனா, வனிதா, மேரி பிளோரினா, பிரியா வினோதினி, உதகை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், செல்வம், பௌ்ளன், ராமச்சந்திரன், ராஜூ, மாதன், காளி, கிளை செயலாளர்கள் நிர்வாகிகள் வெங்கடேஷ், சுசிலா சமையல் கோபால், பெரியசாமி, ஸ்டான்லி, எச்.பி.எப்ரவி, ரியாஸ், பாபு, ராஜேஷ், தாவீது, மணி, ராமன், அருண், வேனு, ஜூபீர் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *