ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை மாவு, சர்க்கரை, அரிசி, பருப்பு, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக பசு, எருமை, ஆடு, கோழிகளை வழங்குவதாகவும், ஒரு வருடத்திற்கு இலவச ஜியோ இணைப்பும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. விபத்தில் கால்கள் மற்றும் கைகளை இழந்தவர்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் பிற உபகரணங்களும் வழங்கப்படும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.