ஆளும் கட்சி திமுகவில இருந்து அப்டேட் செய்தி வருதோ இல்லையே நாளுக்கு நாள் அதிமுகவில இருந்து அப்டேட் வந்துட்டே இருக்கு. அந்த சுட சுட அப்டேட் என்னனு தான கேக்குறீங்க
நேத்து மாலை திருசெந்தூரில் சசிகலாவை அவர் தங்கிருந்த ஹோட்டலுக்கே போய் சந்திச்சு 20 பேசிருக்காரு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடைய தம்பி ஓ.ராஜா.
சசிகலாவை சந்திச்ச சந்தோசம் முடியுறதுக்குள்ள அடுத்த அதிர்ச்சி செய்தி அவருக்கு வந்துருக்கு.
அட ஆமாங்க அவர தான் இப்போ கட்சி இருந்து அதிரடியா நீக்கி அதிமுக தலைமை உத்தரவு போட்டுருக்கு.
சரி உண்மையாவே சசிகலாவை ஓ..ராஜா சந்திச்சதுக்கு தான் கட்சியில இருந்து நீக்குனான்களானு கேட்டா, இல்லைனு தான்
சொல்லணும். ஏன்னா ஏற்கனவே டிடிவி தினகரன் கல்யாணத்துல சசிகலா கலந்து கொண்டப்ப ஓ.ராஜாவும் சந்திச்சுட்டு தான் வந்துருக்காரு. அதுனால சந்திச்சது மட்டும் காரணம் இல்ல, கூடவே இன்னொரு காரணமும் இருக்கு.
அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னாடி தேனியில ஓ.பன்னீர்செல்வத்துடைய பண்னை வீட்டுல அதிமுகவில சசிகலா , டிடிவி தினகரனை இணைக்கனும்னு தேனி மாவட்ட செயலாளர் தலைமையில ஒரு தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தது உங்களுக்கு நியாபகம் இருக்கும். அந்த தீர்மானத்துக்கு அடித்தளம் போட்டதே ஓ,.ராஜா தான். இத அவரே பேட்டியும் கொடுத்து இருக்காரு.
அவர் கொடுத்த பேட்டியில நான் இதுக்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருக்கேன்.சசிகலா கண்டிப்பாக அதிமுகவுக்கு வரணும், தேனி விருதுநகர்னு எல்லா ஊருலயும் தீர்மானம் அடுத்தடுத்து நிறைவேற்ற இருக்காங்கனும் அவர் சொல்லிருந்தாரு.
இதுக்கு அடுத்து தான் சசிகலாவை சந்திச்சு பேசிருக்காரு. கட்சியை மீறி நடந்துகிட்டதால தான் அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துருக்குனு கட்சிகாரங்க சொல்றாங்க.
அதுமட்டும் இல்லாம இப்படி ஒவ்வொருத்தரா கிளம்புனா எனகென்ன மரியாதை இருக்குனு சாட்டைய கையில எடுத்துருக்காரு எடப்பாடி பழனிச்சாமி. ஆனா சமரசம் இல்லாம ஒருங்கிணைப்பாளர் தம்பினு கூட பார்க்காம இப்படி அதிரடில இறங்கிருக்குற எடப்பாடிய பாத்து மற்ற தலைவர்களும் நமக்கு எதுக்கு வம்புனு சைலண்ட்மோடுக்கு போயிட்டாங்கலாம்.
அது மட்டும் இல்லாம ஓ.பன்னீர்செல்வத்தோட தம்பி ஓ.ராஜாவுக்கு இந்த நிலைமைனா தீர்மானம் எல்லாம் போட்டு கொடுத்த நம்ம நிலைமை என்ன ஆகும் கலக்கத்துல தேனி மாவட்ட செயலாளர் சையது கானும், அவரோட ஆதரவளர்களும் இருக்காங்கலாம்.
அதிமுக தலைமையோட Danger zone லிஸ்ட்ல அடுத்து சையது கான் பேரும் இருக்குமோனு கட்சி வட்டாரத்துல தகவல். கட்சிய விட்டு நீக்குன ஓ.ராஜாவும் இரட்டை தலைமை எல்லாம் சரி பட்டு வராது , ஓபிஎஸ் இபிஎஸ் ரெண்டு பேரும் இரட்டை குழல் துப்பாக்கியெல்லாம் கிடயாது , வெறும் தீபாவளி துப்பாக்கி தான். அதுனால சசிகலா அதிமுகவுக்கு வரனும்.அவுங்க வந்தா தான் கட்சி ஒரு எழுச்சிய சந்திக்கும்னு காட்டமா பேசியிருக்காரு.
இனி இந்த பிரச்சனை இதோட முடிய போகிறது இல்ல..விரைவில் பொதுக்குழு கூடும்னு எதிர்பார்க்கலாம்.யாரும் பார்க்காத சண்டை எல்லாம் அங்க நடக்கும். ஒத்தையானு இரட்டையா பொதுக்குழுவுல தெரியும்னு எதிர்பார்க்கலாம்.

- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]