• Thu. Mar 28th, 2024

நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ByA.Tamilselvan

Apr 22, 2022

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .
சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது . இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 தண்ணீர் தினம் கொண்டாடப்படும் என்றும்,மேலும் நவம்பர் 1 உள்ளிட்ட ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.
1,19,000 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என கூறினார். அமர்வுப்படி தொகை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு 5 மடங்கு உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சிறந்த ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *