தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாது கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவகாற்றால் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாகவே இரவு பகலாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நிலத்தடி நீர்மடம் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குளிர்ச்சியான சூழலலும் நிலவுவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.