பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசு வழக்கபோவதாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?. அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே-கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு