• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏர்டெல் ஷோரூமை திறந்துவைத்த எம்.பி. விஜய் வசந்த்!

vijay vasanth

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் ஏர்டெல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த திங்கள் சந்தை பகுதியில் பிரம்மாண்ட ஏர்டெல் ஷோரூமை எம்.பி.விஜய் வசந்த் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தோடு, முதல் விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளச்சல் பெந்தகோஸ் பாஸ்டர் ஜான் விஜய குமார், தென்மண்டல மேலாளர் சினில் ஜோஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.