கோவை மாவட்டத்தில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், பொள்ளாட்சி, வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், புதிதாக காரமடை, மதுக்கரை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், உதயமாகியுள்ளது. இந்நிலையில் ஏழு நகராட்சிகள் இம்முறை தேர்தல் களத்தில் உள்ளது.
இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த முறை பா.ஜ.க., தனித்து நின்று வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்.அதற்கு காரணம் தலைவர் பதவி நேரடி தேர்தல் நடந்ததுதான். மேட்டுப்பாளையம் நகராட்சியை பொறுத்தமட்டில், சுமார் 60,000 வாக்காளர்கள் உள்ள நிலையில், 50,000 வாக்குகள் பதிவாகி விடும்.
இதில் சிறு பான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டும் 22,000 உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஒக்கலிகவுண்டர், செட்டியார், கவுண்டர், அருந்ததியர், முதலியார், தேவேந்திரகுல வேளாளர் என பல்வேறு சமூக மக்கள் இருந்தாலும், பெரும்பான்மையாக இஸ்லாமியர்களே உள்ளனர்.
இதனால் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிய வேட்பாளர்களையே தேர்தல் களத்தில் இறக்குவார்கள்.
தி.மு.க.,வை பொருத்தவரை மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவராக ரஜாக், மாதையன் ஆகிய இருவர் பொறுப்பு வகித்துள்ளனர். இந்நிலையில் இம்முறை எப்படியேனும் மேட்டுப்பாளையம் நகராட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக இறங்கியுள்ளார்.
முன்னதாக கரூர் டீம் பத்து பேர் இங்கு தங்கி பூத் கமிட்டி அமைத்து பட்டுவடாவும் முடிந்து விட்டது.இந்நிலையில் தி.மு.க., தரப்பில் வழக்கறிஞரும், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான அஸ்ரப் அலியின் பெயர் பேசப்படுகிறது. காரணம் இவர் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி, நீலகிரி எம்.பி., ஆ.ராசா ஆகியோருடன் மிகவும் இணக்கமாக பயணித்து வருபவர். இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத நிலையில், முதல் முறையாக நகர்மன்ற தலைவராக வாய்ப்பு கேட்கிறார்.
இதற்கெல்லாம் ஹைலைட்டான விஷயமாக பார்த்தால், கட்சியினரின் வழக்குகளுக்கு இலவசமாக ஆஜராகி வருவதால், அவருக்கான செல்வாக்கு தனித்துவமாக தெரிகிறது.
மேலும் தி.மு.க., தரப்பில் தெற்கு நகர செயலாளரும், வழக்கறிஞருமான முனுசாமி, இவர் மேட்டுப்பாளையத்தில் மிகவும் பரிச்சயமானவர். வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பிரபலமானவர். மேலும் கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகம்மது யூனுஸ், தி.மு.க., வில் முக்கியப் புள்ளி பேச்சாளர் இவருக்கென தி.மு.க.,வில் தனி இமேஜ் உள்ளது. இவர்கள் தலைவர் பதவிக்கு ரேஸ்ஸில் உள்ளனர்.
அ.தி.மு.க., தரப்பில் கடந்த முறை போட்டியிட்ட மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் இம்முறையும் வாய்ப்பு கேட்டுள்ளார். அ.தி.மு.க.,வில் பல ஆளுமைகளை உருவாக்கியவர் கிங் மேக்கர் என்றழைக்கபடுகிறார்.அவர் மட்டுமல்ல நகர செயலாளர் வான்மதி சேட், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரமா செல்வி ஆகியோரும் போட்டியிட சீட்டு கேட்டுள்ளனர்.
மேலும் பா.ஜ.க., தரப்பில் முன்னாள் தலைவர் சதீஷ்குமார் இம்முறையும் வாய்ப்பு கேட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க., இருப்பதால், இரு கட்சிகளில் யாருக்கு வாய்ப்பு என அடுத்தடுத்த நகர்வுகளில் தான் தெரிய வரும். பா.ஜ.க., அதிக வார்டுகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
இதெல்லாம் ஒரு புறமிறமிருக்க மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு என்பது உறுதி செய்யபடும் பட்சத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் மனைவிகள் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.




- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]