• Wed. Apr 24th, 2024

திருமணமான புதுமாப்பிள்ளை 3 மாதத்தில் தற்கொலை:

By

Sep 13, 2021 ,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி . கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலேயே மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது தாய் வீடுக்கு சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குட்டி
நேற்று முன்தினம் முத்துக்குட்டி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தால் , உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *