குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமம், காட்டேரி அணை மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனு நீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டம் சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றும், 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், முதலமைச்சரின் விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.2,00,000/-ற்கான நலத்திட்ட உதவிகளும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என ரூ.14,49,500/-ற்கான நலத்திட்ட உதவிகளும்,தோட்டக்கலைத் துறையின் மூலம் 101 பயனாளிகளுக்கு ரூ.11,02,180/-ற்கான மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகளும், மாவட்ட வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் 05 பயனாளிகளுக்குரூ. 1,10,600/-ற்கான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.8,000/-ற்கான உதவித்தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.7,900/-ற்கான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 02 பயனாளிகளுக்கு ரூ.11,000/-ற்கான நலத்திட்ட உதவிகளும், முன்னோடி வங்கி மூலம் 07பயனாளிகளுக்கு ரூ.20,50,000/ற்கான வங்கிக்கடனும், 10 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவ உதவிகளும் என இச்சிறப்பு முகாமில் ஆக மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.49,39,180/ற்கான நலத்திட்ட உதவிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.