• Thu. Apr 25th, 2024

மானாமதுரை- மதுரை இடையே புதிய மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி ஆய்வு..!

மானாமதுரை- மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.

மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில்பாதை மின் பாதையாக மாற்றும் திட்டத்தில் தற்போது மதுரை- உச்சிப்புளி வரை ரயில் பாதையை மின்மயமாக்கல் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் புறப்பட்டு கீழ் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் ரயிலை நிறுத்தி மின் பாதையை ஆய்வு செய்தார்.


அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் முக்கிய சந்திப்பான மானாமதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை ஆய்வு செய்தார். பின்னர் மானாமதுரை- மதுரை இடையே உள்ள 47 கி.மீ தூரத்துக்கு மின்சார ரயில் பாதையில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் சென்றவாறு பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஆய்வு நடத்தினார். அப்போது மின்பாதை திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்யுமாறு ரயில்வே பொறியாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *