மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருமாத்தூர் கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரிக்காக கொடியேற்று விழா நடைபெற்றது.

திடியன் உச்ச பட்டி பாரம்பரிய பூசாரி வகையறா ராணி சோலை தேவர் மக்கள் கொடியேற்று விழாவை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து பாப்பார கருப்பசாமி வீரபத்திர சாமி, துர்க்கை அம்மன் விருமன் மாயன் பேச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.










