மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள துரைசாமி நகரில் வாகை ரகம் மரம் உள்ளது. இந்நிலையில் திடீரென மரத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது. அப்பகுதி மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். பிறகு அருகாமையில் இருந்த அக்கம் பக்கத்தினர் அந்த தண்ணீரை வாளி வாளியாக பிடித்து சென்றனர். அதேபோல மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும் என்ற பிரமிப்போடு அக்கம் பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர். சிறிது நேரம் கழித்து தண்ணீர் தானாகவே நின்று போனது,இது ஒரு அதிசய நிகழ்வாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதோ அந்த வைரல் வீடியோ…