மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி 2026 முடிய வாய்ப்பு- ஜூன் சித்திரைத்திருவிழா தேரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.
மதுரையில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டி.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் கலந்து கொண்டார். மேலும் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள், ஆர்.வி கன்சல்டன்ட் அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் பத்மநாபன் மற்றும் நில அளவை, குடிநீர் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மெட்ரோ ரயில் வழித்தட விவரங்கள் குறித்த மேப் மற்றும் புகைப்படங்கள், ரயில் நிறுத்த நிலையங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், பூமிக்கு அடியில் டனல் அமைப்பது குறித்து ஆர்.விகன்சல்டன்ட் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.இதில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் மெட்ரோ ரயில் வழித்தட வரைப்படங்களை காட்டி அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் அ.மு.சித்திக் பேசுகையில்,
மதுரையில் மெட்ரோ திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டிபிஆர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியானது தற்போது துவங்கி உள்ளது.முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது.ஒத்தக்கடை டூ திருமங்கலம் 25 கிலோமீட்டர் மேல் பகுதியிலும், ஐந்து கிலோமீட்டர் சுரங்கப்பாதையிலும் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் நிறுத்தம் 14 நிலையங்கள் மேல் தளத்திலும், 4 நிலையங்கள் தரை தளத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 2024 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் அனுமதி பெற்று பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.2024 டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணி துவங்கி 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.60% நிதி நிறுவனங்கள் நிதியும், 20% மாநிலம்,20% மத்திய அரசு நிதி உடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை என்பது ஒரு பாரம்பரிய தொல்லியல் நகரம் ஆகையால் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் சுரங்கப்பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.சுரங்கப்பாதை அமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது, இருப்பினும் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்னும் ஓரிரு வாரத்தில் மதுரை மாநகரில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ள பகுதிகளில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் சர்வே பணி துவங்கும்.மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் வரும் வகையில் வடிவமைக்கப்படும்.ஐந்து கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் 20 மீட்டர் ஆழத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்என்றார்
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]
- ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மதுரையில் மவுன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனைமதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து காஞ்சி மகா பெரியவர் […]
- இந்தியாவில் மே மாதத்தில் அதிகரித்த கார் விற்பனை வளர்ச்சி..!இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கார் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் கடந்த […]
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]