சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுவதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.கடந்த 5-ம் தேதி தொடங்கிய மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சித்திரை முதல் நாளான இன்று காலை 10.35 மணி முதல் 10.59-க்குள் நடைபெறுகிறது. இதை மக்கள் கண்டுகளிக்க வசதியாக கட்டணச் சீட்டு அனுமதியும் இலவச அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. நேரில் வர முடியாதவர்கள் தொலைக்காட்சி, யூ டியூப், பேஸ் புக் நேரலை மூலமும், திருக்கோயில் இணையதளத்திலும், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள மாமதுரை செயலி மூலமும் கண்டு பக்தி பரவசம் அடையலாம்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாலையிலிருந்து இன்று மாலை வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து வைபவம் நடக்கிறது.
இதற்காக ‘பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்தர் சபை’யினர் ஆண்டு தோறும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். 22 ஆண்டுகளாக இந்த விருந்து வைபவத்தை சிறப்பாக நடத்தி வரும் இவர்கள், கடந்த 2 ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாட்டால் பெரிய அளவில் விருந்து கொடுக்க முடியாததால் இந்தாண்டு விருந்து வைபவத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்தனர்.
இதற்காக நன்கொடையாளர்கள் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட், பரவை மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் 5 டன் காய்கறிகளை வழங்கியுள்ளார்கள். இதுபோல் அரிசி வியாபாரிகள், எண்ணெய்,பலசரக்கு, மளிகை பொருள்களை அந்தந்த வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கியுள்ளனர். எரிவாயு விநியோகஸ்தர் சங்கத்தினர் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விருந்து உபசரிப்புக்கான பணியில் 100-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், 500 க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இவர்களுடன் 1000 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
காய்கறிகளை வெட்ட, இலை வெட்ட மதுரையிலுள்ள பெண்கள், ஆண்கள் நூற்றுக்கணக்கான பேர் அரிவாள்மனை, கத்திகளுடன் வந்து வேலை செய்கின்றனர்.
பலவகையான ருசியில் மக்கள் உணவருந்த வேண்டும் என்பதால் ஒரே மாதிரி இல்லாமல், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என வெரைட்டியாக உணவு வழங்கப்படுகிறது. நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடைபெற்றது.தாங்கள் வணங்கும் தெய்வத்தின் திருமண விருந்துக்காக ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்து தங்கள் வீட்டுத் திருமணம் போல் வேலை செய்வதும், அதன் மூலம் மன நிறைவு கொள்வதையும் மதுரையில் மட்டுமே காண முடியும். அதுபோல் திருக்கல்யாணத்துக்கு வருகை தந்த மக்கள் சாமிக்கு மொய் எழுதுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 16-ம் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
- எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கைகண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்பொதுக்குழுவுக்கு […]
- குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் […]
- பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து நிதின் கட்காரி நீக்கம்பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான […]
- ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டிஅதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் […]
- மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள்மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம். பல்வேறு மாநிலங்களில் […]
- மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பிமதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி […]
- திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜைதிருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் […]
- கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது -ஓபிஎஸ்அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா […]
- ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் […]
- ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் […]
- தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
- உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் […]
- ஜவான் படத்தில் விஜய்சேதுபதி.. அவரே உறுதி செய்துள்ளார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் […]
- இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழுஇபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை […]
- தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை […]