ஆண்டிபட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் நேற்று மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு தாலி மாற்றிக் கொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பாக உற்சவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முத்தாய்ப்பாக நேற்று நடந்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
இவ்விழாவில் சுந்தரேஷ்வரர் வெண்பட்டு உடுத்தியும், தாயார் மீனாட்சி பச்சை பட்டு உடுத்தியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்து சமய ஆகம விதிகளின்படி வேத மந்திரங்கள் ஓத, கெட்டி மேளம் முழங்க சுந்தரேஷ்வரர் , தாயார் மீனாட்சிக்கு மாங்கல்யம் அணிவித்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை பயபக்தியுடன் கண்டு களித்தனர். சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொண்டனர்.
பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் , விபூதி, சர்க்கரை, கல்கண்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இத்திருக்கல்யாணத்தை முன்னிட்டு கல்யாண விருந்து அளிக்கப்பட்டு , மொய் எழுதப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கலதா தலைமையில் விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.


- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […] - 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடுவிதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு […]
- அழகு குறிப்புகள்முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் […]
- சமையல் குறிப்புகள்காளான் மிளகு வறுவல்: தேவையான பொருள்கள்:-காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை […]
- பொது அறிவு வினா விடைகள்சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?உத்தரகாண்ட் முதல் பெண் இந்திய விண்வெளி வீரரின் பெயரைக் […]
- குறள் 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக […]