மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. கள்ளழகரை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலி. 24க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆண் பெண் இருவர் பலி 24 பேர் காயம்.