• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுகவின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் … ஆர்.பி.உதயகுமார் அறிக்கை

ByKalamegam Viswanathan

Feb 13, 2025

எங்களது நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கழக அம்மா பேரவை கழக அமைப்பு ரீதியில் உள்ள 82 மாவட்டங்களிலும் திண்ணை பிரச்சாரங்கள் மூலம் மக்களை சந்தித்து திமுகவின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் போர்க்களத்தில் ஈடுபட்டு, புரட்சிதமிழர் ஐயா எடப்பாடியார் தலைமையில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சிதலைவி அம்மா ஆட்சி மலர வெற்றி சரித்திரம் படைப்போம்.

எடப்பாடியார் அவர்களின் கரத்தை கழக அம்மா பேரவை வலுப்படுத்தும், இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார். கழக அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சூளுரை…

மதுரை

திராவிட இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை நாம் பார்க்கின்ற பொழுது, தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் தொடங்கி நீதி கட்சி பரிணாம வளர்ச்சியில் திராவிட இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் தொடர்ந்து, தேர்தல் அரசியல் என்கிற அடிப்படையிலே பேரறிஞர் அண்ணா கொட்டுகிற மழையில் ராபின்சன் பூங்காவிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உருவாக்கினார்.

அதனை தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கேள்விக்குறியான திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த மிகப்பெரிய பங்கு வகித்த புரட்சித்தலைவர், ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாய மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தர மக்களையும் வாழ்வில் ஒளியேற்ற 17. 10.1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.

அப்போது அவர் சந்திக்காத விமர்சனம், அவமானம் எல்லாம் தூள், தூளாக்கி மன வலிமையோடு, மக்கள் பேராதரோடு ஆட்சியை அமைத்தார் புரட்சித்தலைவர் இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் புட்சி தலைவி அம்மா இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற பொறுப்பையும் ஏற்று அத்தனை வேதனைகளையும், கஷ்டங்களையும் தனதாக்கிக் கொண்டு, ஒன்னரை கோடி தொண்டர்களை உருவாக்கி, மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார், எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களை எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக ,அமைச்சராக உருவாக்கி சேவை செய்யும் அரிய வாய்ப்பினை அளித்தார்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவுடு, பொடியாக்கி ,அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து உள்ளார்கள்.

இன்றைக்கு திமுக மக்களாட்சி மகத்துவத்தை மறந்து, மன்னர் ஆட்சியை வேறூண்றிட செய்கிறது, இன்றைக்கு திமுகவிற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆசியோடு அவர் எடுத்த முயற்சிகள் ஒன்றல்ல, இரண்டல்ல, இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.

அதிமுக என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று சொன்னாலே அது எல்லோருடைய கண் திருஷ்டி பெற்று சோதனைகளை சந்தித்து சாதனைகளாக மாற்றிய இயக்கம்.

புரட்சித்தலைவருடைய மறைவிற்குப் பிறகு சிதறிய தேங்காய்வாய் சிதறிய இயக்கம், அம்மாவின் முயற்சியாலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம் தலை நிமிர்ந்து நிற்பகிறது அதேபோலத்தான் அம்மாவின் மறைவுக்கு பின்பு எடப்பாடியார் சிறப்பாக இயக்கத்தை நடத்தினார்.

52 ஆண்டுகளிலே 32 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்து பல்வேறு சாதனை திட்டங்களை படைத்தது, அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் நான்கு நாள் நிற்குமா? என்று வீர வசனம் பேசினார்கள் அதை எல்லாம் விவேகத்துடன் செயல்பட்டு நான்காண்டுகள் மூன்று மாதம் முழு முழு ஆயுதையும் சிறப்பாக செய்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், 7.5 சகவீத இட ஒதுக்கீடு, 2000 அம்மா மினி கிளினிக், 6 புதிய மாவட்டங்கள் 50 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு தீர்வு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அம்மா பெற்ற தீர்ப்பை நடத்தி காட்டினார். முதலமைச்சர் பதவி என்பது அலங்கார பதவி அல்ல, மக்கள் சேவைக்கான பதவி என்று ஒரு புதிய இலக்கணத்தை எடப்பாடியார் படைத்தார்.இயக்கத்திற்கு சோதனைகள் வரலாம் தொண்டர்கள் மன வலிமையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள்,துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்தும்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த சேதாரம் இல்லை,இது மக்களால் பாதுகாக்கப்படுகிற இயக்கம்.

மக்களானால் நான், மக்களுக்காகவே நான், எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும், இங்கு இல்லாத இல்லை நிலை உருவாகும் என்று அம்மா சொன்னார் அந்த அம்மா சொன்ன தாரக மந்திரத்துடன் அம்மாவின் மறுபடிவமாக மீண்டும் அம்மா ஆட்சியை மலரச் செய்த ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

இதற்காக கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை நாளை முதல் களம் காண இருக்கிறது, நம்மை ஒற்றுமைப்படுத்த, நாம் வலிமையோடு திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற தீய சக்தியை வேரோடும், மண்ணோடு வீழ்த்தி காட்ட ,நமக்கு இன்னும் உத்வேகம் வழங்குகிற தருணம் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே மக்கள் சக்தி தான் மகத்தான சக்தி, ஒரு இயக்கத்தினுடைய ஆயுட்காலத்தை மக்கள் சக்தி தானா,நிர்ணயிக்க முடியும்,ஒரு இயக்கத்தின் மதிப்புகளை, ஒரு இயக்கத்தினுடைய எதிர்காலத்தை மக்கள் தான் உருவாக்கியிருக்கிறார்.

ஆகவே மக்கள் சக்தி பெற்றிருக்கிற மகத்தான இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது.

கழக அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களில் கழக அம்மா பேரவை எடப்பாடியார் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம், தற்போது ஸ்டாலின் திமுக ஆட்சியில் அமளிக்காடாக மாறிவிட்டது என்றும், இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 6 கோடியே 30 லட்சம் மக்களிடத்தில் அம்மா அரசின் சாதனை திட்டங்களையும், திமுக அரசின் வேதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வீதி வீதியாக திண்ணை பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.

அம்மா ஆட்சி மலர செய்ய உழைத்து கொண்டிருக்கும் உத்தமர் எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்துகிற அந்த மகத்தான பணியை செய்ய வேண்டிய தருணம்.

இந்த பிரச்சாரம் ஒரு வரலாற்றுப் பிரளயத்தை ஏற்படுத்தும், தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு பேர் ஆபத்து, இந்த தமிழகத்திலே ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிற அந்த நிகழ்வை மெல்ல மெல்ல திமுக நடத்திக் கொண்டிருக்கிறது.

வாரிசு அரசியலை நடத்துவதால் குப்பன் சுப்பன் எங்கே போவது?
கருணாநிதி குடும்பம் தான் இந்த நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்று சொன்னால் எங்கே போவது ஜனநாயகம். ஆகவே தமிழகத்தில் விடுபட்டு இருக்கிற சவால் ஜனநாயகத்திற்கு விடுத்தப்பட்டிருக்கிறது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

அதிமுக மக்கள் இயக்கம் ஒருநாளும் அதிமுகவை மக்கள் கைவிட மாட்டார்கள், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர வீதிதோறும் கழகக் கொடியை கையில் ஏந்தி, சாதனை துண்டு பிரச்சனைகளை மக்களுக்கு வழங்கிடுவோம்.

தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் சட்ட ஒழுங்கு சீர்கேடு, வாரிசு அரசியல், விலைவாசி உயர்வு,மின் கட்டண உயர்வு, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றாகி விட்டது. இதை அப்புறப்படுத்த கழக அம்மா பேரவை போர்க்களத்தில் வெற்றியைப் பெற்று புதிய வெற்றியை சரித்திரம் படைக்கும் என கூறினார்.