“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் செய்தால் நாம் பேராபத்தை சந்திப்போம்” என கோவையில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு கூறினார்.
“நர்விகேட் 2023” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கட்டுமானம் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கோவை பி.எஸ்.ஜி கன்வென்சன் சென்டரில் தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலக நிலப்பரப்பில் வெறும் 4% மட்டுமே நம்மிடம் உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் 17 % பேர் நம் தேசத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் 20% ஆக உயர வாய்ப்புள்ளது. ஆனால், அந்த கூடுதல் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் நிலம் நம்மிடம் இல்லை. இருக்கும் 4 சதவீத நிலப்பரப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் அரண்மனைகள் கட்டியது போன்ற அணுகுமுறையை இப்போது கையாண்டால் நாம் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும்.
நீங்கள் அனைவரும் தனி நபராக செழித்திருக்க வேண்டும் என்றால், மொத்த தொழிற்துறையும் செழிப்புடன் இருக்க வேண்டும். தொழிற்துறை செழிப்புடன் இல்லாத வரையில், நீங்கள் வளமுடன் இருக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு அழிப்பதன் அவசியம் குறித்து பேசுகையில் “தேசம் என்பது வெறும் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளால் கட்டமைக்கப்படுவதில்லை. சிறந்த மனிதர்களை உருவாக்குவதன் மூலமே சிறந்த தேசம் உருவாகிறது. உடல்ரீதியாக, மனரீதியாக, திறன் ரீதியாக ஆகச்சிறந்த மனிதர்களை உருவாக்கிற போது மகத்தான தேசம் உருவாகும்.
நம்முடைய தேசத்தில் 15, 16 வயதை அடையக்கூடிய குழந்தைகள், குறைந்தபட்சம் 8 – 10 மில்லியன் வரை தற்போது இருப்பார்கள். அவர்கள் கல்வியறிவு உடையவர்கள் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் இரண்டையும் இரண்டையும் கூட கூட்ட முடிவதில்லை. மேலும், அவர்களிடம் எந்த விதமான தொழில் திறனோ அல்லது போதிய கல்வியறிவோ இல்லை. இத்தகைய திறமையற்றவர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதும் சாத்தியமில்லை. இந்த நிலையானது வெடிக்க தயாராக இருக்கும் அணுகுண்டை போன்றது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களால் நாட்டில் குற்றவியல் மற்றும் இதர எதிர்மறை செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தேசத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டில் அதிகப்படியான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.” என்றார்
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]