சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகரை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகச் செயல்படுகிறது. அதேபோல அங்கு சட்டப்பேரவை கிடையாது. மாநகராட்சி தான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் அங்கு பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா நகராட்சி மேயராக இருந்தார். சமீப நாட்கள் முன்னர் அங்கு 35 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 14 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது.
12 வார்டுகளை தான் ஆளும் பாஜக பெற்றுள்ளது. மீதமுள்ள 9 இடங்களில் எட்டில் காங்கிரஸும் அகாலி தளம் 1 இடத்திலும் வெற்றிபெற்றன. பாஜக சார்பில் மேயராக இருந்த ரவி காந்த் சர்மா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. எப்போதுமே சண்டிகரில் காங்கிரஸும் பாஜகவும் தான் மாறி மாறி மேயர் பதவியைக் கைப்பற்றும். ஆனால் ஆம் ஆத்மி முதன்முறையாக மேயரை கைப்பற்றுவதற்கான சூழல் அமைந்தது. பெரும்பான்மையான கவுன்சிலர்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி தான் மேயர் பதவியைக் கைப்பற்றும் என அக்கட்சி தொண்டர்கள் குஷியில் இருந்தனர்.
ஆனால் எதிரே நிற்பது பாஜக என்பதை மறந்துவிட்டார்கள் போல. ஆம் இம்மாதிரியான சொற்ப அளவிலான தோல்வியை பாஜக என்றுமே நழுவவிடாது. எதையாவது செய்து வேறு கட்சியில் வெற்றிபெற்றவர்களை இழுத்துப்போட்டு வெற்றியை தன்வசமாக்கிவிடும். கடந்த காலங்களில் பல்வேறு மாநில தேர்தல்களில் தோல்விமுகத்தில் இருந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதையே தான் சண்டிகர் மேயர் தேர்தலிலும் செய்திருக்கிறது. பெரும் முதலைகளைப் பார்த்த மேயர் தேர்தல் எனும் சுண்டெலியைப் பிடிப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்லவே.
வார்டு கவுன்சிலர்கள் ஒன்று கூடி இன்று மேயரை தேர்வு செய்தனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சு கத்யால், பாஜக சார்பில் சரப்ஜித் கவுர் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். காங்கிரஸ் புறக்கணித்ததால் பாஜக-ஆம் ஆத்மிக்கே நேரடி போட்டியே நிலவியது. இச்சூழலில் தான் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அரங்கேறின. காங்கிரஸ் சார்பில் கவுன்சிலராக தேர்வான ஹர்பிரீத் கவுர் திடீரென பாப்லா பாஜகவில் இணைய, பாஜகவின் பலம் 13ஆக உயர்ந்தது. அடுத்த ட்விஸ்ட்டாக பழைய ரூல் ஒன்று தூசி தட்டப்பட்டது. அதன்படி சண்டிகர் எம்பியாக இருப்பவர் மாநகராட்சியில் ஏற்கெனவே உத்தியோகபூர்வ உறுப்பினராக இருந்தால், அவர் வாக்களிக்கலாம் என்ற விதி தான் அது.
அதன்படி பாஜக எம்பி கிரென் கெர் வாக்களித்தார். இதனால் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது. வாக்கு எண்ணிக்கைப்படி இரு கட்சிகளும் தலா 14 வாக்குகள் இருந்ததால் சமமான போட்டி நிலவியது. யார் ஜெயிப்பார் என நினைத்திருந்த வேளையில், ஆம் ஆத்மி கத்யாலுக்கு செலுத்தப்பட்ட 1 வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பாஜகவின் தாமரை மீண்டும் மலர்ந்தது. பாஜகவின் சரப்ஜித் கவுர் மேயரானார்.
இதில் காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என நினைக்கலாம். ஆனால் பஞ்சாப் தேர்தல் எதிர்வரும் நிலையில், ஆம் ஆத்மிக்கு சப்போர்ட் செய்தால் அக்கட்சி வலுப்பெற்றுவிடும்.
பாஜகவுக்கும் வாக்களிக்க முடியாது. எதுவுமே செய்ய முடியாத சூழலில் தான் மேயர் தேர்தலை புறக்கணித்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கவுன்சிலரை தட்டி தூக்கி வெற்றியை உறுதிசெய்தது. இதன் மூலம் தன்னுடைய இமேஜையும் காப்பாற்றிக் கொண்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது பாஜகவுக்கு பூஸ்ட் கொடுத்தது போல அமைந்துள்ளது. இந்த வெற்றி பஞ்சாப்பிலும் எதிரொலிக்கும் என பாஜக எதிர்நோக்குகிறது. பஞ்சாப் சிங்குகள் பாஜகவை வரவேற்பார்களா அல்லது அடித்து அனுப்புவார்களா என நாமும் எதிர்பார்ப்போம். கடைசி நிமிட தோல்வி ஆம் ஆத்மியை உருக்குலைத்துள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இதனால் தொண்டர்களும் கவுன்சிலர்களும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]