• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது

ByKalamegam Viswanathan

Dec 9, 2024

மதுரை விமான நிலையம் அருகே விமானம் ஏறும் போதும், தரை இறங்கும் போதும் விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் துறை சார்பாக ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

மதுரை மாநகர் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கு நேரடியாக விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் போதும், விமான நிலையத்திலிருந்து மேலெழும் போதும் அதனை பார்வையிடுவதற்காக விமான நிலையத்தின் வெளியே தெற்கு பக்கம் உள்ள சுவர் அருகிலும், பரம்புபட்டி கிராமத்திற்கு அருகிலும் மற்றும் சில இடங்களில் பொதுமக்கள் கூடி நின்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமானங்களைப் பார்வையிட கூடும் போது, சிலர் விமானங்கள் தரையிறங்கும் போதும், மேலெழும்பும்போதும் கண்களை கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி மற்றும் பிளாஷ் லைட்களை விமானங்களை நோக்கி அனுப்புவதாக தெரிய வருகிறது. பொதுமக்களில் சிலரின் மேற்படி செயல்களினால் விமானங்களை இயக்கும் விமானிகள் விமானங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

எனவே மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் போதும், மேலெழும்போதும் அதனை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்கள் கண்களை கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி மற்றும் பிளாஷ் லைட் விமானத்தை நோக்கி அனுப்ப கூடாது என்றும், அதனை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்படி செயல்கள் செய்யும் நபர்கள் பற்றிய விவரத்தினை காவல் நிலைய அலைபேசி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என மதுரை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.