• Thu. May 15th, 2025

குமரி கலெக்டர் எச்சரிக்கை..,

மே15_ம் தேதிக்கு முன் பள்ளி கல்லூரி வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள். வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், கடைகள், அனைத்து அலுவலகங்களிலும், மே 15க்குள் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று அறிவுறுத்தினார். தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது, விளக்கங்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.