• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமூக ஆர்வலருக்கு பாராட்டு

ByKalamegam Viswanathan

Dec 22, 2024

கீழே கிடந்த செல்போன் மற்றும் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் மதுரை அம்மன் சன்னதி அருகில் வெள்ளைப்பூடு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபார விஷயமாக கரூர் சென்று அங்கிருந்து மதுரை நோக்கி சென்ற போது வாடிப்பட்டி தனுச்சியம் பிரிவு அருகே சென்ற போது இவரது பணப்பை கீழே தவறி விழுந்து இருக்கிறது. அதே வழியில் வந்த கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெட்சர்கான் சாலையில் கருப்பு கலரில் பை இருப்பது தெரிந்து, அதனை எடுத்து பார்த்துள்ளார். உடனே பையில் செல்போன் ஒன்றும் 2500 ரூபாய் பணமும் இருந்துள்ளது. மேலும் உள்ளே இருந்த முகவரியை வைத்து மதுரை அம்மன் சன்னதி அருகே உள்ள வெள்ளைப் பூண்டு கடைக்கு சென்று செல்போன் மற்றும் ரூபாய் 2500 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். கீழே கிடந்த பணப்பை மற்றும் செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர் கருப்பட்டியை சேர்ந்த லட்சர்கான் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.