• Mon. May 6th, 2024

சிவகாசியில் அண்ணா சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்த மரியாதை

Byதரணி

Feb 3, 2023

அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் அண்ணாவின் 54-வது நினைவு தினம் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது. சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், சிவகாசி மாநகர பகுதிக் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம்(எ) ராஜ அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதூருதீன், விருதுநகர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சிமுருகன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன், திருத்தங்கல் கூட்டுறவு சங்க வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிஙபிரபு, ரபுஸ்ரீவில்லிபுத்தூர் நகர மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் பாலபாலாஜி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜி.ஓ காலனி மாரிமுத்து, திருத்தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி கிழக்கு தகவல் தொழில்நுட்ப செயலாளர் வல்லவராஜா, கட்சி நிர்வாகிகள் விஸ்வநத்தம் மணிகண்டன், இளநீர் செல்வம், சிவகாசி முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் காமாட்சி, திருமுருகன் உட்பட மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *