தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கொச்சை படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கைவிடுத்துள்ளார்
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை ஆளுநர் தொடர்தால் அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் என்று கே.எஸ் . அழகிரி எச்சரித்துள்ளார்.திருக்குறளை திரித்து பொழிபெயர்த்ததாக ஜி.யு.போப் மீது குற்றம் சாட்டிய ஆர்.என்.ரவிக்கு தன்னுடைய கண்டங்களை அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ஆர்.எஸ்.எஸ்.முகத்தை ரவி அவ்வப்போது காட்டுகிறார். என்று குற்றம்சாட்டிய அவர் இதை தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.