• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

போக்சோ வழக்கில் கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ByAnandakumar

May 15, 2025

கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலவொளி என்பவருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், யுவராஜ் என்பவருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம் பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி சேங்கல், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற போது அப்பள்ளியில் பணிபுரிந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி, வயது (42) பார்வதிபுரம், முசிறி, திருச்சி மாவட்டம் மற்றும் அப்பள்ளியின் தாளாளர் யுவராஜ், வயது (41) காந்தி நகர், சத்திரப்பட்டி, ஆலம்பாடி, குஜிலியம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் ஆகியோர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இவ்வழக்கின் குற்றவாளிகளான நிலவொளி, யுவராஜ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இந்த வழக்கில் தொடர்புடைய நிலவொளி என்பவருக்கு போக்சோ குற்றத்திற்காக 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும், யுவராஜ் என்பவருக்கு போக்சோ குற்றத்திற்காக 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000/- நிவாரணம் அளிக்க நீதிபதி தங்கவேல், கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மகிளா நீதிமன்றம் நீதிபதி அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேற்கண்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி தற்போது திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் மற்றும் கலைவாணி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காவலர் சண்முகபிரியா ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் பாராட்டினார்கள்.