காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் அகத்தியர் வணங்கிய பிரசித்தி பெற்ற அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் தெப்ப உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நட்சத்திரத்தை ஒட்டி திருக்கல்யாண வைபவமும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசைகளை எடுத்து வர அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டு தெப்ப உற்சவத்தை ஒட்டி மேள தாள, தாரை தம்பட்டம், ஒலிக்க, அதிர் வேட்டுகள் வெடிக்க, சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரப் பெருமான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் குளத்தில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், மலர் மாலைகள், கட்டி மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் உள்ளாவூர் அகஸ்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவ விழா..!
Related Post
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்