அவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 54 ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பால்குடம், வேல் குத்துதல், பூக்குழிவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தாகள் அலகு குத்தி , பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.